பாம்புக் கடி
· எருக்கன் செடியின் வேரைப் பறித்து வந்து மைபோல அரைத்து கடிவாயின் மேல்போட குணம் கிடைக்கும்.
· தும்பைப்பூச் செடியின் இலைச்சாறு வாழைத் தண்டின் சாற்றையும் கலந்து கொடுத்தால் விஷம் இறங்கும்.
· எருக்கன் செடியின் பிஞ்சு இலைகளை இரண்டு அல்லது மூன்றை மென்று தின்றால் பாம்பின் விஷம் இறங்கி விடும்.
· வண்ணிமரத்தின் பட்டையை சிறிதும் அதன் இலைகளை சிறிதும் எடுத்து சுத்தம் செய்து காயவைத்து இடித்து தூள் செய்து அந்தத்தூளை 5-கிராம் எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட விஷம் இறங்கிவிடும்.
· முற்றிய வாழைத்தண்டின் சாறு 100 மில்லி எடுத்து அதனுடன் தும்பை இலைச்சாறு 100 மில்லி எடுத்து இரண்டையும் ஒன்றாக கலக்கி உள்ளுக்குக் கொடுத்தால் விஷம் முறியும்.