வயிற்று வலி
· வாயு விடங்கத்தையும் கடுக ரோகினியும் சம அளவு எடுத்து மைய அரைத்து தொப்புள் மீது தடவ வலி நீங்கும்.
வயிற்று உப்புசம் குறைய
· ஒரு கொத்து துளசி இலையைப் பறித்து சுத்தம் செய்து அதனுடன் சீரகம் சிறிது வைத்து நீர் விட்டு மைய அரைத்து குழைந்தைக்கு சிறிது கொடுக்க வயிற்று உப்புசம் குறையும்.
இழுப்பு நோய்
· சிறிய வெங்காயத்தைச்சாறு பிழிந்து கண்களில் சிறிது விட குணமாகும்.
கரப்பான் நோய்
· கொட்டுக்கிழங்கை சிறுசிறு துண்டுகளாக்கி காயவைத்து இடித்து சூரணமாக வைத்துக்கொண்டு பசும்பாலில் கலந்து கொடுக்க கரப்பான் நோய் நீங்கும்.
· வன்னிமர இலையை இடித்துத் தூள் செய்து தேன் விட்டுக் குழைத்து அந்தக் கலவையை சுத்தமான தேங்காய் எண்ணையில் கலந்து தேய்க்க குணமாகும். 5-கிராம் தூளை பாலில் கலந்து உள்ளுக்கு குடிக்க கரப்பான் நோய் குணமாகும்.
· வசம்பு, வெங்காயம், இலுப்பைப் பட்டை, பாவட்டை இலை இவற்றை வகைக்கு 60-கிராம் எடுத்து சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி சுண்டக்காய்ச்சி பாட்டிலில் வைத்துக்கொண்டு தினசரி 3-வேளை கொடுக்க குணமாகும்.
தூக்கத்தில் சிறுநீர் போவதை தடுக்க
· கீழா நெல்லி வேரை சுத்தம் செய்து இடித்துச் சாறு பிழிந்து 1-ஸ்பூன் சாறெடுத்து கறந்தபாலுடன் கலந்து 5-நாட்கள் சாப்பிட குணமாகும்.